அறத்துப்பாலில் மனித உயிர் பற்றி...
இந்த ஊரில், safty first, saftey is our #1 priority, என்று சொல்லுவார்கள். அதோடு மட்டுமல்லாமல், எந்த அளவுக்கு உயிருக்கு மதிப்பு கொடுக்கிறார்கள் என்றும் நமக்குத் தெரியும். அறத்துப்பாலில் வள்ளுவர் உயிர் பற்றி என்ன சொல்கிறார்? உயிருக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று பார்ப்போம்.
உயிர் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று சில குறள்களில் சொல்கிறார்.
அன்பின் வழியது உயிர்நிலை அ•திலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. - 80.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. - 78.
என்று சொல்லி, உயிர் என்றால் அது அன்புடன்கூடியதாக இருக்க வேண்டும் என்கிறார்.
“தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு”
என்ற ஜேசுதாஸ் பாடிய பாடலை பலரும் ரசித்துக் கேட்டிருப்பீர்கள். அந்தப்பாடலில் ஓருடத்தில் இப்படி வரிகள் வரும்.
“கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி”
பசிக்காகக் கொன்றால் பாவம் இல்லையாம்.
இங்கே வள்ளுவர் எந்தக் கட்சி என்று இந்தக் குறள் வழியாகப் பார்ப்போம்
தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை. - 327.
தன்னுடைய உயிரே போகக்கூடிய நிலையிலும், இன்னொரு உயிரைக் கொல்லாதே என்கிறார்.
இப்படியெல்லாம் வாழ்வதாக இருந்தால் உயிரோடு இருக்காதே என்ற வகையில் காட்டமாக சில குறள்களை இயற்றியுள்ளார்.
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். - 214.
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன். மற்றவர்கள் செத்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கத் தரும். - 183.
கோள் சொல்லிப் பொய்யனாக உயிர் வாழ்வதைவிடச் செத்துப்போவது அறநூல்கள் சொல்லுகிற புண்ணியத்தைத் தரும்.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயி¡¢னும் ஓம்பப் படும். - 131.
ஒருவனுக்கு மேன்மை உண்டாக்குவது நல்லநடத்தைதான். அதனால், அதை உயிரைவிடச் சிறந்ததாகப் பாதுகாக்கவேண்டும்.
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. - 230.
சாவதைவிடத் துன்பமானது வேறொன்றுமில்லை. ஆனால், வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வருகின்றபோது அச்சாதலும் இனியதேயாகும்.
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. -309
சினத்தில் அளவுகடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர். சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பானவர்.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. - 82.
என்று விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில் சாவா மருந்தாகிய அமிர்தமே என்றாலும் விருந்தினரை விட்டு தனியே உண்ணாதே என்கிறார். இந்தக் குறள் பரவாயில்லை இந்தத் தொகுப்பில் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறமாதிரியான குறள்.
உயிர் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று சில குறள்களில் சொல்கிறார்.
அன்பின் வழியது உயிர்நிலை அ•திலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. - 80.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. - 78.
என்று சொல்லி, உயிர் என்றால் அது அன்புடன்கூடியதாக இருக்க வேண்டும் என்கிறார்.
“தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு”
என்ற ஜேசுதாஸ் பாடிய பாடலை பலரும் ரசித்துக் கேட்டிருப்பீர்கள். அந்தப்பாடலில் ஓருடத்தில் இப்படி வரிகள் வரும்.
“கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி”
பசிக்காகக் கொன்றால் பாவம் இல்லையாம்.
இங்கே வள்ளுவர் எந்தக் கட்சி என்று இந்தக் குறள் வழியாகப் பார்ப்போம்
தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை. - 327.
தன்னுடைய உயிரே போகக்கூடிய நிலையிலும், இன்னொரு உயிரைக் கொல்லாதே என்கிறார்.
இப்படியெல்லாம் வாழ்வதாக இருந்தால் உயிரோடு இருக்காதே என்ற வகையில் காட்டமாக சில குறள்களை இயற்றியுள்ளார்.
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். - 214.
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன். மற்றவர்கள் செத்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கத் தரும். - 183.
கோள் சொல்லிப் பொய்யனாக உயிர் வாழ்வதைவிடச் செத்துப்போவது அறநூல்கள் சொல்லுகிற புண்ணியத்தைத் தரும்.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயி¡¢னும் ஓம்பப் படும். - 131.
ஒருவனுக்கு மேன்மை உண்டாக்குவது நல்லநடத்தைதான். அதனால், அதை உயிரைவிடச் சிறந்ததாகப் பாதுகாக்கவேண்டும்.
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. - 230.
சாவதைவிடத் துன்பமானது வேறொன்றுமில்லை. ஆனால், வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வருகின்றபோது அச்சாதலும் இனியதேயாகும்.
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. -309
சினத்தில் அளவுகடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர். சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பானவர்.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. - 82.
என்று விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில் சாவா மருந்தாகிய அமிர்தமே என்றாலும் விருந்தினரை விட்டு தனியே உண்ணாதே என்கிறார். இந்தக் குறள் பரவாயில்லை இந்தத் தொகுப்பில் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறமாதிரியான குறள்.
0 Comments:
Post a Comment
<< Home