எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Sunday, October 23, 2005

அறத்துப்பாலில் அறிவு

அறிவு அறத்திற்கு எவ்வாறு உதவுகிறது? அறிவு பற்றி அறத்துப்பாலில் சில குறள்களில் வள்ளுவர் சொல்கிறார்.

அறிவினிலே தலையான அறிவு என்ன என்று இந்தக்குறளில்,

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். - 203.


என்கிறார். தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை எல்லாவகை அறிவிலும் தலையான அறிவு என்கிறார்.

சரி. அறிவினால் என்ன பயன் ? இன்னாசெய்யாமை அதிகாரத்தில்,

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை. - 315.


மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன்தான் என்ன? என்று கேட்கிறார். அதே அதிகாரத்தில் இன்னொரு குறளில்,

தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல். - 318.


தன் உயிர்க்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்கு அத்துன்பங்களைச் செய்தல் என்ன காரணத்தாலோ?


இதே போல, வெ•காமை என்ற அதிகாரத்தில்,

அ•கி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெ•கி வெறிய செயின். - 175.


யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் என்ன பயன்? என்கிறார் வள்ளுவர்.


அறிவுடையவர்கள் எப்படி இருப்பார்கள்?

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். - 198.


அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

1 Comments:

Post a Comment

<< Home