அறத்துப்பாலில் அறிவு
அறிவு அறத்திற்கு எவ்வாறு உதவுகிறது? அறிவு பற்றி அறத்துப்பாலில் சில குறள்களில் வள்ளுவர் சொல்கிறார்.
அறிவினிலே தலையான அறிவு என்ன என்று இந்தக்குறளில்,
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். - 203.
என்கிறார். தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை எல்லாவகை அறிவிலும் தலையான அறிவு என்கிறார்.
சரி. அறிவினால் என்ன பயன் ? இன்னாசெய்யாமை அதிகாரத்தில்,
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை. - 315.
மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன்தான் என்ன? என்று கேட்கிறார். அதே அதிகாரத்தில் இன்னொரு குறளில்,
தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல். - 318.
தன் உயிர்க்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்கு அத்துன்பங்களைச் செய்தல் என்ன காரணத்தாலோ?
இதே போல, வெ•காமை என்ற அதிகாரத்தில்,
அ•கி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெ•கி வெறிய செயின். - 175.
யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் என்ன பயன்? என்கிறார் வள்ளுவர்.
அறிவுடையவர்கள் எப்படி இருப்பார்கள்?
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். - 198.
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.
அறிவினிலே தலையான அறிவு என்ன என்று இந்தக்குறளில்,
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். - 203.
என்கிறார். தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை எல்லாவகை அறிவிலும் தலையான அறிவு என்கிறார்.
சரி. அறிவினால் என்ன பயன் ? இன்னாசெய்யாமை அதிகாரத்தில்,
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை. - 315.
மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன்தான் என்ன? என்று கேட்கிறார். அதே அதிகாரத்தில் இன்னொரு குறளில்,
தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல். - 318.
தன் உயிர்க்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்கு அத்துன்பங்களைச் செய்தல் என்ன காரணத்தாலோ?
இதே போல, வெ•காமை என்ற அதிகாரத்தில்,
அ•கி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெ•கி வெறிய செயின். - 175.
யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் என்ன பயன்? என்கிறார் வள்ளுவர்.
அறிவுடையவர்கள் எப்படி இருப்பார்கள்?
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். - 198.
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.
1 Comments:
At Tuesday, October 25, 2005 10:40:00 PM,
erode soms said…
அறிவுக்கு வழிவகுத்த அறிஞ்னருக்கு
நன்றி
Post a Comment
<< Home