அறத்துப்பாலில், எது இன்பம்?
இன்பத்துப்பால் என்று தனியாக எழுதியிருந்தாலும், வள்ளுவர் வேறுவகையான இன்பங்களைப் பற்றி அறத்துப்பாலில் சொல்கிறார். அந்த இன்பங்களைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.
எது இன்பம்?
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. - 65.
தம்முடைய மக்களின் உடலைத் தொடுதல் உடலுக்கு இன்பம் தருவதாகும். அம்மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் தருவதாகும்.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. - 39.
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். - 228.
தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் வன் கண்மை உடையவர் பிறருக்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ?
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும். - 98.
இனிமையான சொற்களையே பேசினால் அது இம்மை மறுமை இரண்டுக்கும் இன்பம் தருவதாக அமையும்.
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. - 94.
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்கு துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. - 75.
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்.
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசுஅறு காட்சி யவர்க்கு. - 352.
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம்மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்பநிலையைக் கொடுக்கும்.
இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். - 369.
அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாத துன்பம் கெடுமானால் இவ்வுலகிலும் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.
சிற்றின்பம் வெ•கி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். - 173.
அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர் நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். - 156.
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் மட்டும் இன்பம். ஆனால், பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரையில் புகழ் உண்டு.
எது இன்பம்?
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. - 65.
தம்முடைய மக்களின் உடலைத் தொடுதல் உடலுக்கு இன்பம் தருவதாகும். அம்மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் தருவதாகும்.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. - 39.
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். - 228.
தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் வன் கண்மை உடையவர் பிறருக்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ?
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும். - 98.
இனிமையான சொற்களையே பேசினால் அது இம்மை மறுமை இரண்டுக்கும் இன்பம் தருவதாக அமையும்.
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. - 94.
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்கு துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. - 75.
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்.
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசுஅறு காட்சி யவர்க்கு. - 352.
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம்மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்பநிலையைக் கொடுக்கும்.
இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். - 369.
அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாத துன்பம் கெடுமானால் இவ்வுலகிலும் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.
சிற்றின்பம் வெ•கி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். - 173.
அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர் நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். - 156.
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் மட்டும் இன்பம். ஆனால், பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரையில் புகழ் உண்டு.
1 Comments:
At Thursday, October 27, 2005 4:28:00 AM,
Anonymous said…
surungak koori vilanga vaikkum kural onguka!
Post a Comment
<< Home