எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Sunday, October 23, 2005

அறத்துப்பாலில் வள்ளுவர் அறிந்தவற்றில் சிறந்தது

வள்ளுவர் தான் அறிந்தவற்றில் சிறந்தது என்றவகையில் அறத்துப்பாலில் கூறுபவை இவை,


பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. - 61.


நாம் அடைய வேண்டுமென்று விரும்புகிற செல்வங்களுக்குள் நல்லறிவுடைய குழந்தைகளைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்தது வேறு இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்
வாய்மையின் நல்ல பிற. - 300.


யாம் உண்மையாகக் கண்ட பொருள்களுள் வாய்மையைவிட உயர்ந்தது வேறு ஒன்றுமில்லை.

0 Comments:

Post a Comment

<< Home