அறத்துப்பாலில் செல்வம் ...
பொருட்பால் என்று வைத்து, அதில் செல்வம் பற்றி வள்ளுவர் நிறையப் பேசுகிறார்.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். -751 (பொருட்பால்)
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எ•கதனிற் கூ¡¢ய தில். -759 (பொருட்பால்)
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. 757 (பொருட்பால்)
அதே சமயத்தில் அறத்துப்பாலிலும் செல்வம் பற்றி பேசுகிறார். சில டிப்ஸ் கொடுக்கின்றார். அப்படி செல்வம் பற்றி வள்ளுவர் அறத்துப்பாலில் என்னதான் சொல்கிறார்?
அ•காமை செல்வத்திற்கு யாதெனின் வெ•காமை
வேண்டும் பிறன்கைப் பொருள். - 178.
செல்வம் குறையாமல் இருக்கவேண்டுமானால், மற்றவரின் பொருளைக் கவர நினைக்கக்கூடாது என்கிறார். அதே அதிகாரத்தில்,
அறனறிந்து வெ•கா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. - 179.
மற்றவர் பொருளை அறத்தினை உணர்ந்து கவர நினைக்காதவரிடம் செல்வம், தானே போய்ச் சேரும் என்கிறார்.
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. - 31.
அறமானது, சிறப்பினைத் தருவதோடு செல்வமும் தரும் என்கிறார்.
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்று வந்த பொருள். -754 (பொருட்பால்)
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. - 112.
நடுவுநிலையோடு இருக்கக்கூடிய ஒருவனுக்கு, அவனுடைய செல்வம் அவனுடைய கடைசி காலம்வரை சிதைவில்லாமல் இருந்து பலனளிக்கும்.
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். -84
விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சியோடு உபசரிப்பவனின் வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். -751 (பொருட்பால்)
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எ•கதனிற் கூ¡¢ய தில். -759 (பொருட்பால்)
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. 757 (பொருட்பால்)
அதே சமயத்தில் அறத்துப்பாலிலும் செல்வம் பற்றி பேசுகிறார். சில டிப்ஸ் கொடுக்கின்றார். அப்படி செல்வம் பற்றி வள்ளுவர் அறத்துப்பாலில் என்னதான் சொல்கிறார்?
அ•காமை செல்வத்திற்கு யாதெனின் வெ•காமை
வேண்டும் பிறன்கைப் பொருள். - 178.
செல்வம் குறையாமல் இருக்கவேண்டுமானால், மற்றவரின் பொருளைக் கவர நினைக்கக்கூடாது என்கிறார். அதே அதிகாரத்தில்,
அறனறிந்து வெ•கா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. - 179.
மற்றவர் பொருளை அறத்தினை உணர்ந்து கவர நினைக்காதவரிடம் செல்வம், தானே போய்ச் சேரும் என்கிறார்.
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. - 31.
அறமானது, சிறப்பினைத் தருவதோடு செல்வமும் தரும் என்கிறார்.
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்று வந்த பொருள். -754 (பொருட்பால்)
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. - 112.
நடுவுநிலையோடு இருக்கக்கூடிய ஒருவனுக்கு, அவனுடைய செல்வம் அவனுடைய கடைசி காலம்வரை சிதைவில்லாமல் இருந்து பலனளிக்கும்.
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். -84
விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சியோடு உபசரிப்பவனின் வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
0 Comments:
Post a Comment
<< Home