அறிவுடைமை பற்றி வள்ளுவர் - 1
சுத்தியும் எங்கபாத்தாலும் ஆளுயரத்துக்கும் மேல காய்ஞ்சு போன மஞ்சள் நிறத்தில கதிரும், தட்டும், புல்லும் புதருமான அடர்த்தியான காடு. அதுக்கு நடுவுல பத்து பதினைந்து பேர் நடந்து போய்கிட்டு இருந்தாங்க. அந்தக்கூட்டத்தில ஒரு வயசானவரும் இருந்தாரு. தூரத்துல பாத்தா ஒரே புகை. நல்லா உத்து பாத்தா தீ பத்திக்கிட்டு எரியுது. சரின்னு இன்னொருபக்கம் திரும்பிப் பாத்தாலும் தீ கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தள்ளி எரிஞ்சுகிட்டு இருக்குது. கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தீ வளையத்துக்குள்ள அவங்க சிக்கிகிட்டாங்க.
காட்டுத்தீயோடு உஷ்ணத்தை பக்கத்துல போயி பாத்தா நல்லாபுரியும். எல்லாரும் உயிருக்கு பயந்துகிட்டு இருந்தாங்க. எந்தப்பக்கமா ஓடறது? எல்லாபக்கமுந்தான் தீ எரியுதே!
அப்ப பெரியவர், “நாம இங்க நமக்கு பக்கத்துல தீ பத்த வச்சு புதர்களை எல்லாம் எரிச்சு தீ நம்மகிட்ட வராதமாதிரி ஒரு பாதுகாப்பு பண்ணிக்கலாம்” ன்னு சொன்னாரு.
உடனே அங்க இருந்தா ஒருத்தர் தீப்பெட்டியை உரசி பக்கத்துல இருந்த புதரை பத்த வைக்கப்போனாரு. பெரியவர் உடனே “தம்பி நிறுத்து”. அப்படீன்னாரு.
“கொஞ்சம் பொறுத்திருந்து பத்த வைக்கலாம். ஏன்னா, தூரத்தில எரியுற தீ இன்னும் கொஞ்சம் பக்கத்துல வரும்போது தீ சூடா இருக்கறதனால காத்து அந்த தீயை பாத்து வீசும். இப்ப காத்து நம்ம பாத்துதான் வீசுது. அதனால தீ சுமாரா அரை கிலோ மீட்டர் தூரத்துல இருக்கும் போது பத்த வைக்கலாம். அப்பத்தான் நாம நெனக்கிறமாதிரி நாம பத்த வச்ச தீ எதிர் திசையில் போயி நம்ம காப்பாத்தும்” ன்னு மேலும் சொன்னாரு.
இப்படி திட்டமிட்டபடி அவங்க தீய பத்தவச்சு காட்டுத்தீயிலிருந்து தங்களை காப்பாத்திகிட்டாங்க.
இங்க அவங்கள காப்பாத்துனது அந்த பெரியவரோட அறிவு. இப்படி அறிவு நம்மை காப்பத்தறதப் பத்தி கோடிக்கணக்குல கதைகள் இருக்கு. அறிவுடைமை அதிகாரத்துல வள்ளுவர் முதல் குறள்ள “அறிவு அழிவிலிருந்து காக்ககூடிய ஒரு கருவி. அந்த அறிவு எதிரியாலும் உள்ளே வந்து அழிக்க முடியாதது” ன்னு சொல்றார்.
இப்ப இணையதளத்தையே எடுத்துக்குங்க. உதாரணமா இணையதளத்துல மின்னஞ்சல் பார்க்கப்போறோம். அப்போ மேலேயோ, பக்கத்திலேயோ மினுக் மினுக்குன்னு ஒரு விளம்பரம். இல்லைன்னா பாப்-அப் லே விளம்பரம். அதுல, ராசிபலன், ஜாதகம், குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சின்னோ அல்லது வேற ஏதாவது தேவையில்லாத, ஆனா ஆர்வத்தை தூண்டற மாதிரியோ இருந்ததுன்னா உடனே கிளிக். பார்க்கவேண்டிய மின்னஞ்சல் மறந்துபோச்.
அதே மாதிரி கணினிகள்ள ஏகப்பட்டவகையில் வைரஸ், worm ன்னு அழிவு தர்றமாதிரியோ அல்லது தொந்தரவு தர்ற மாதிரியோ புரொகிராம் எழுதறாங்க. அதுல பல பேரு சின்னவயசு பசங்கதான். இப்படி அழிவு தர்ற வழியில் புரொகிராம் எழுதாம open source ல உபயோகப்படற மாதிரி எத்தனையோ வகையில அவங்க புரொகிராம் எழுதினா எவ்வளவு நல்லாயிருக்கும்.
இதுக்குத்தானோ என்னவோ வள்ளுவர் 422வது குறள்ள, மனம் போன போக்கில அறிவை செலவு செய்யாம தீமைகளை ஒதுக்கி நன்மைகளை மனதில் வைத்து செலவு செய்வதே அறிவுன்னு சொல்றாரோ?
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். - 421
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. - 422
0 Comments:
Post a Comment
<< Home