எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Saturday, November 05, 2005

புதிர் #3

நண்பர்கள் குழுவாக நின்று கொண்டு அளவளாவிக்கொண்டு இருந்தார்கள். வழக்கம் போல ஒரு நண்பர் அவருடைய தீரக்கதைகளைச் சொல்லிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அவர் சொன்னார்,
"மரங்களுக்கிடையில் நான் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்த பொழுது அந்த மிருகம் ஓடையைக் கடந்து வந்தது. அப்பொழுது என்னால் அதன் நான்கு நனைந்த முழங்கால்களின் முன்பகுதிகளைப் பார்க்க முடிந்தது. . ."

சரியாக இந்த நேரத்தில் வரதன் அங்கு வந்தான். கதைசொல்லிக்கொண்டிருந்த நண்பரைப் பார்த்து நீ எந்த மிருகத்தைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்கின்றாய் என்று எனக்குத் தெரியும் என்றான்.

உங்களுக்கு தெரியுமாங்க?

2 Comments:

Post a Comment

<< Home