எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Saturday, November 19, 2005

கல்வி பற்றி வள்ளுவர்

கல்வி அதிகாரத்தையும் இலக்கிய ஆய்வுக்கூட்டம் அலசியது. ஒவ்வொரு குறளையும் தனித்தனியாக, பொறுமையாக தெளிவாக ஆய்வு செய்தார்கள். அப்பொழுது கூட்டத்தில் வெளிப்பட்ட கருத்துக்களில் சிலவற்றை இங்கே சுவைக்காக சிறிது மாற்றம் செய்து தொகுத்துக் கொடுக்கிறேன்.

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

இந்த அதிகாரத்தில் முதல் குறளை இப்படியும் படிக்கலாம் என்று சொன்னார்கள்.

கற்க கற்க
கற்க கசடற
கற்க கற்பவை
கற்க கற்றபின்
கற்க நிற்க
கற்க அதற்குத் தக

இலக்கண முறைப்படி இல்லாவிட்டாலும், இப்படிப் படிப்பது ஒரு சுவையாகத்தான் இருந்தது.

இங்கேயும் பார்த்தீர்களானால், பொருளாதாரம், வரலாறு அல்லது அறிவியல் என்று இதைப் படி என்று சொல்லாமல், வள்ளுவர் பொதுவாக கற்க கற்பவை என்று சொல்கிறார்.

பேச்சு இப்படி சிறிது நேரம் போனது. அதில் மிகச்சிறிய பகுதி மட்டும்.

ராச்செஸ்டர் பல்கலக்கழத்திலிருந்து கொடுக்கப்பட்ட கல்வித்திட்டப் புத்தகத்தில் “கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு” என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதி அதனடியில் அழகாக “அவ்வையார்” என்று எழுதியிருந்ததுங்க.

அனேகமா யாராவது தமிழர் அங்கு இருந்திருப்பார். அவர்தான் இப்படி எழுதச் செய்திருப்பார்.

இப்படிச் செய்தவர் ஒரு மாணவனாகக்கூட இருந்திருக்கலாம்.

ஆமா, இந்த் ஊரிலே, ராச்செஸ்டர் பல்கலைக்கழத்தில் இப்படி எழுதவேண்டும் என்று இல்லையே? எத்தனையோ இது போல் ஆங்கிலத்தில் இருக்கத்தானே செய்கிறது

ஆனா பார்த்திங்கன்னா, கல்வி நிறுவனத்திற்கு “கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு” ங்கறது ஒரு அருமையான மார்க்கெட்டிங் டூல்.

சரியாச் சொன்னீங்க. நல்ல மார்க்கெட்டிங் டூல்தான்

இது ஒரு நல்ல முயற்சி. நாமும் நம்முடைய தொழிலில் எப்படி எப்படி தமிழில் உள்ள நல்ல விஷயங்களைக் கொண்டுவர முடியுமோ அப்படியெல்லாம் முயற்சி செய்யவேண்டும்.

நல்ல ஐடியாங்க!

கார்ல்சேகன் என்பவர் பல வானவியல் புத்தகங்களை எழுதியிருக்காருங்க. அவர் இறக்கிற சமயத்தில் “Contact” என்ற புத்தகத்தை எழுதியிருந்தாருங்க. அந்தப் புத்தகம் திரைப்படமாகக் கூட வந்ததுன்னு நினைக்கிறேன். அந்த புத்தகத்தில் ஓரிடத்தில் வேறுகிரகத்துக்கு பூமியிலிருந்து மனிதர்களை அனுப்புகிற மாதிரி ஒரு காட்சி வரும். அதில், விண்வெளி ஓடத்தில் செல்ல 5 பேரைத் தேர்ந்தெடுப்பாங்க. அதில் ஒருத்தர் தமிழ்ப்பெண். பழமையான திராவிட நாகரிகத்தின் சார்பாக அந்த தமிழ்ப்பெண்ணைத் தேர்ந்தெடுத்திருப்பாங்க. அடுத்த கூட்டத்துக்கு அந்தப் புத்தகத்தைக் கொண்டு வர்ரேங்க.

ம் . . . அப்படிங்களா!

அடுத்த குறளில், எண்ணும் எழுத்தும் இரு கண்களைப் போன்றது என்கிறார் வள்ளுவர். எழுத்து என்று சொல்லும் பொழுது எந்த ஒரு மொழியையும் சொல்லாமல் வெறும் எழுத்து என்று பொதுவாக சொல்கிறார் வள்ளுவர்.


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். - 394

கல்வி கற்றவர்கள் மகிழ்ச்சியுடன் கூடி, அளவளாவி கருத்துக்களைப் பரிமாறியபின் பிரிய மனமில்லாமல் பிரிவார்கள் என்பது பல உரையாசிரியர்களின் கருத்து. நாமக்கல் கவிஞர் உரை வேறு மாதிரி விலகி ஒப்புக்கொள்ள இயலாதவாறு இருந்தது.

(இக்குறளைப் பற்றி சிறுஆராய்ச்சி செய்திருக்கேன். அது பற்றி அடுத்த கூட்டத்தில் கலந்து ஆலோசித்ததுக்கு அப்புறம் அது உருப்படியா இருந்ததுன்னா அடுத்த வலைப்பூவில் எழுதறேன்)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. - 396

பேச்சு இப்படிப்போனது.

இங்க பார்த்தீங்கன்னா “தொட்டனைத்து” என்பது மண்ணைத் தோண்டுவதாக இருக்காது என்று நினைக்கிறேங்க. ஏன்னா! கிணத்துல தண்ணி இறைக்க இறைக்க நல்லதண்ணி ஊறும். அதனால, வள்ளுவர் தண்ணீ இறைக்க இறைக்க அப்படீங்கற பொருள்ளதான் “தொட்டனைத்து” அப்படீன்னு சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன்.

ஆனா! பாத்திங்கன்னா, ஆத்து ஓரத்துல மணல்ல எவ்வளவு ஆழம் தோண்டறீங்களோ அந்த அளவுக்குத்தான் நீர் சுரக்கும்.

ஆமா ஆமா இங்கேகூட வள்ளுவர் மணற்கேணி அப்படீன்னுதானே சொல்லியிருக்கிறார். கேணின்னா கிணறு. மணற்கேணின்னா மணல் கிணறு. அதனால, வள்ளுவர் ஆத்தங்கரையோரமுள்ள மணல் கிணறு தோண்டறதைத்தான் இங்க சொல்லியிருப்பார்.

எந்த அளவுக்கு படிக்கிறிங்களோ அந்த அளவுக்கு அறிவு வளரும் என்பதுதான் கருத்து.

அடுத்த குறள்ள பாத்தீங்கன்னா, இரண்டு அர்த்தங்கள் வரும். அவை என்னன்னா,

1. எந்த நாடும் உன்னுடைய நாடு ஆகும், எந்த ஊரும் உன்னுடைய ஊர் ஆகும் என்கிற மாதிரி கல்விக்கு பெருமை இருப்பாதனால நீ ஏன் இறக்கும் தருவாய் வரைக்கும் படிக்காம இருக்கிறாய்?
2. இப்படி பல பயன்கள் கல்வி கற்பதால் இருக்கிற காரணத்தால, ஏன் தொடர்ந்து சாகிறவரைக்கும் படிக்காம இருக்கிறாய்?

ஆமா கடைசிவரைக்கும் கற்றுக்கொண்டு இருந்தால் Alzheimers வராது அப்படீன்னு சொல்வாங்க.

வீடியோ கேம் கூட Alzheimersஐ குணப்படுத்த/தவிர்க்க உதவறதாவும் சொல்லறாங்க.

மூதுரையில் வர்ற பாடல்ல இப்படி இருக்கு.

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.


இப்பவே பாருங்களேன். நாமே படித்ததால்தானே இங்கு (அமெரிக்காவுக்கு) வர முடிந்தது.

திருவள்ளுவர் காலத்துல பல நாடுகளோடு தமிழகத்திற்கு தொடர்பு இருந்ததா?

ஆமாங்க. பல வாணிபத் தொடர்புகள் இருந்திருக்கு.

ஆமா. உதாரணமா, oriza sativa அப்படிங்கறது அரிசியோட தாவரவியல் பெயர். அதுல வர்ற oriza அப்படிங்கறது கிரேக்க மொழியிலிருந்து வந்தது. ஆனால், orizaங்கற கிரேக்க வார்த்தை அரிசி என்ற தமிழ் வார்த்தையிலிருந்து வந்ததா சொல்வாங்க.

ஆமாங்க யுவான்சுவாங் என்பவர், சீனாவிலிருந்து இந்தியா வந்து பல இடங்கள சுத்திப் பாத்து குறிப்புகள் எழுதினதாச் சொல்வாங்க. அவர் படித்து இருந்ததால அவருக்கு எல்லா இடத்திலும் சிறப்பான வரவேற்பு கிடைத்ததாச் சொல்வாங்க.

தமிழகத்துல காஞ்சிக்கூட வந்து போனதா சொல்வாங்க.

அடுத்த குறளைப்பார்ப்போம்.

ஒருமுறை கற்றகல்வி பல தலைமுறைகளுக்கு உதவும் அப்படீங்கற மாதிரித்தான் சொல்வாரென்று நினைக்கிறேன். ஏன்னா “எழுமை” ங்கற வார்த்தைக்கு ஏழு பிறப்பு என்று பொருள் கொண்டால் சரியாக வருமா? என்பது கேள்வி


அதற்கு அடுத்த குறளில், படித்த காரணத்தால் தான் இன்புறுவதோடு உலகமும் இன்புறுவது கண்டு கற்றவர்கள் மேலும் மேலும் கல்வி கற்க முற்படுவார்கள் அப்படீங்கறார் வள்ளுவர்.

கடைசி குறளில், கல்வியை “கேடு இல்லாத செல்வம்” என்று சொல்கிறார்;


0 Comments:

Post a Comment

<< Home